செய்திகள் :

போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா டிரம்ப்.?!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவிச் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை தீவிரமடைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறி, இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியதன் அடிப்படையிலேயே போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப்போ தான் மட்டுமே தலையிட்டு இந்தப் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான 16 மணி நேர விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார், அவர் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல் காந்தி கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் பூதகரமாக வெடித்திருக்கும் நிலையில், 30-வது முறையாக இந்தப் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லந்து சென்றிருக்கும் அதிபர் டிரம்ப் வாஷிங்டன் வருவதற்கு முன்னதாக அபெர்டீனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் பேசுகையில், “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. ஒருவேளை இந்தியா இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் 25 சதவிகித இறக்குமதி வரியை எதிர்கொள்ளக்கூடும். ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

இந்தியா எனது நண்பர். எனது வேண்டுகோளின் பேரில் அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்” எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த 80 நாள்களில் மட்டும் அதிபர் டிரம்ப் கிட்டத்தட்ட 30 முறைக்கும் மேல் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாக மீண்டும் மீண்டும் தெரிவித்திருக்கிறார்.

டிரம்ப்பின் கருத்தை பிரதமர் மோடி முற்றிலுமாக தவிர்த்து வந்தாலும், அவரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Trump said they ended the war with Pakistan at my request

இதையும் படிக்க :வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி! - இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வங்கதேச நாட்டில், 2025-ம் ஆண்டு துவங்கியது முத... மேலும் பார்க்க

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

மெட்டாவில் ஒரு பில்லியன் டாலர் சம்பளத்துடன் கூடிய வேலையை ஓபன்ஏஐ-யின் முன்னாள் ஊழியர் மீரா முராட்டி நிராகரித்தார்.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்டு ஆர். மார்கோஸ் ஜூனியர், வரும் ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பின்ஸ... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை! பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக... மேலும் பார்க்க

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

சீனாவில் தலாய் லாமாவை புகழ்ந்து பாடல் வெளியிட்ட திபெத்திய கலைஞர்கள் 2 பேர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது நிலைக்குறித்து மிகப் பெரியளவில் கவலை எழுந்துள்ளது.திபெத்திய புத்த... மேலும் பார்க்க

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூலை 30) நள்ளி... மேலும் பார்க்க