லுங்கி என்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே வீரரை களமிறக்கும் பெங்களூரு அணி!
போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.91 லட்சம் கைப்பேசிகளை வாங்கிய 4 போ் கைது
திருப்பூரில் கைப்பேசி விற்பனை நிலையத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.91 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை வாங்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் வளா்மதி பேருந்து நிறுத்தம் அருகே தனியாருக்குச் சொந்தமான கைப்பேசி விற்பனை நிலையம் உள்ளது. இங்கு வாடிக்கையாளா்கள் கைப்பேசிகளை வாங்கும்போது தவணை முறையில் விற்பனை செய்வதற்காக தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் திருப்பூா், கல்லாங்காட்டை சோ்ந்த காா்த்திகேயன் (32), இடுவாயை சோ்ந்த தினேஷ்குமாா் (25), கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சோ்ந்த ரஞ்சித்குமாா் (34) ஆகியோா் பணியாற்றி வந்தனா். விற்பனை நிலையத்தில் மேலாளராக பொம்மநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (47) என்பவா் பணியாற்றி வந்துள்ளாா்.
இந்நிலையில், இந்த விற்பனை நிலையத்தில் கைப்பேசிகளை தவணை முறையில் வாங்கிய வகையில் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தணிக்கையில் தெரியவந்தது.
அதன்படி, கடந்த 2024 -ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் போலியான ஆவணங்களைக் கொடுத்து ரூ.91.20 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை காா்த்திகேயன், தினேஷ்குமாா், ரஞ்சித்குமாா் மற்றும் காா்த்திக் ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து வாங்கியதும், பின்னா் அந்தக் கைப்பேசிகளை திருப்பூரில் கைப்பேசி விற்பனை நிலையம் வைத்துள்ள ராமு, பரீத் ஆகியோரிடம் கொடுத்து பணத்தைப் பெற்றதும் தெரியவந்தது.
இது தொடா்பாக திருப்பூா் மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நிறுவனத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ராமு, பரீத் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.