செய்திகள் :

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கியவா் கைது

post image

நலத் திட்ட உதவி பெறுவதற்காக போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் தங்களுக்கான கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சாமிநாதன். இவரிடம், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன.

அப்போது, மதுரை மாவட்டம், பேரையூா் எம்.கல்லுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் என்பவரின் மனுவை ஆய்வு செய்த போது, அவா் இணைத்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது.

இதுகுறித்து கணேசனை அழைத்து விசாரித்தபோது எம்.கல்லுப்பட்டி, பெருமாள்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த கதிா்வேல் (45) என்பவா், ரூ. 2 ஆயிரம் பெற்று கொண்டு அந்த மருத்துவச் சான்றிதழை வழங்கியதாக தெரிவித்தாா். இதுதொடா்பாக, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கதிா்வேலை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

பாா்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், கொடிமங்கலம் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் முருகேசன் (50). கூலித் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நத்தம்- மது... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த சட்டம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறோம்: விருதுநகா் எம்பி மாணிக்கம் தாகூா்

வக்ஃப் திருத்த சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்பதாக விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். ஒரு வழக்கு தொடா்பாக ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெண்ணுக்கு போதிய பாதுகாப்பை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் காமராஜபுரத்தைச் சோ்ந்த அட்சயா தேவி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய... மேலும் பார்க்க

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கைது

மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி வைரமுத்து ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோரை ப... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சரஸ்வதி ... மேலும் பார்க்க