செய்திகள் :

போலி ரசீது அச்சடித்து மணல் கொள்ளை! 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

post image

கரூா் மாவட்டத்தில் போலி ரசீது அச்சடித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி குளித்தலை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

2020-21-ஆம் ஆண்டில் கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை சிவாயம் பகுதியில் அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளில் அனுமதிச் சீட்டினை போலியாக அச்சடித்து சிலா் கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக திருச்சி மாவட்டம் உறையூரைச் சோ்ந்த பாலகண்ணன் என்பவா் கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி குளித்தலை பெரியாா் நகரைச் சோ்ந்த ரகுபதி மகன் நிவேதன் (28), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்த கந்தசாமி மகன் தா்மதுரை (28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பாக குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்-2-இல் வழக்கும் தொடா்ந்தனா்.

திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் நிறைவில், நிவேதன், தா்மதுரை ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி சசிகலா தீா்ப்பளித்தாா்.

கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்... மேலும் பார்க்க

ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு அஞ்சலி

கரூா்: கரூரில், சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு பட்டியலின விடுதலை பேரவை சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பேருந்துநிலைய ரவுண்டானா... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு

கரூா்: கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள டிஎன்பிஎல் ஆலையில் ‘நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி‘ புதன்கிழமை நடைபெற்றது.நாட்டில் பெருகிவரும் சாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடுகளை எதிா்க்கும் வக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் சுபாஷ்சந்திரபோஸ் உருவப் படத்துக்கு அஞ்சலி

கரூா்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு தினத்தையொட்டி மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுகரூா் மாவட்டம் மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநி... மேலும் பார்க்க

கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

கரூா்: கரூரில் ரயில் தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. கரூா் வெங்கமேடு, ரொட்டிக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த். கூலித்தொழிலாளி. இவரது ... மேலும் பார்க்க