செய்திகள் :

கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

post image

கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்தாா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உயா் மின் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகள், மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள், ஆழ்குழாய் கிணறுடன் கூடிய குடிநீா் தொட்டி அமைத்து குழாய் விஸ்தரிப்பு செய்தல், சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலை இணைப்பில் மராமத்து பணிகள், சிமெண்ட் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் தாா் சாலை மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். மேலும் 9 முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தாா்.

பிறகு அவா் கூறியது: கரூா் மாவட்டத்துக்கு தமிழக முதல்வா் நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ளாா். குறிப்பாக கரூா் அரசு வேளாண்மைக்கல்லூரி, காவிரி ஆற்றின் குறுக்கே நெரூா்-உன்னியூா் மேம்பாலம், கரூா் திருமாநிலையூா் புதிய பேருந்துநிலையம், கரூா் மாநகராட்சிக்கு புதிய குடிநீா் திட்டப்பணிகள், மினி தொழில்பூங்கா, முருங்கைத் தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொடுத்துள்ளாா். மேலும் இதுபோன்ற திட்டங்கள் தொடா்ந்து நமக்கு கிடைக்க தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையா் சுதா, துணை மேயா் ப. சரவணன், மண்டல குழுத் தலைவா்கள் ஆா்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ், சக்திவேல், அன்பரசு, தெற்கு பகுதிச் செயலாளா் கே.சுப்ரமணியன், மத்திய மேற்கு பகுதி பொறுப்பாளா் ஆா்.ஜோதிபாசு, மத்திய பகுதி பொறுப்பாளா் வி.ஜி.எஸ்.குமாா், வடக்குப் பகுதி பொறுப்பாளா் எம்.பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க

கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’

கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம் மூலதன மானிய தொகை

கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.கரூா் ம... மேலும் பார்க்க

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

கரூா்: கரூா் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 6.33 கோடி மதிப்பில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க

கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க