செய்திகள் :

போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்கள்! - என்ன சிக்கல்?

post image

பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா பதவிக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஜனதா கட்சியின் தலைவர் நவ்நீத் சதுர்வேதிவ். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டார்.

இவரின் முதல் வேட்புமனுவில் 10 ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-கள் அவருக்கு ஆதரவளிப்பதாக பெயர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ-க்களின் கையொப்பம் இல்லை என தேர்தல் ஆணையம் அந்த வேட்புமனுவை நிராகரித்துவிட்டது.

நவ்நீத் சதுர்வேதி
நவ்நீத் சதுர்வேதி

அதைத் தொடர்ந்து இரண்டாவதாக ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் பெயர் குறிப்பிடப்பட்ட 10 வேட்பாளர்களின் கையொப்பம் இருந்தது.

இதற்கிடையில், வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்ட 10 எம்.எல்.ஏ-களும் பஞ்சாபின் பல்வேறு பகுதி காவல் நிலையத்தில், 'வேட்புமனுவில் இருப்பது எங்கள் கையெழுத்து அல்ல, எங்கள் கையெழுத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது' எனப் புகாரளித்தனர்.

அதன் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை நவ்நீத் சதுர்வேதியைக் கைது செய்ய சண்டிகர் வந்திருக்கிறது.

அதேநேரம் நவ்நீத் சதுர்வேதி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சண்டிகர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

எனவே, அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை சண்டிகர் காவல்துறை ஏற்றுக்கொண்டது. அதனால், பஞ்சாப் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கு அனுமதியளிக்கவில்லை.

இந்த நிலையில், சண்டிகர் காவல் நிலையத்தின் வாசலில் பஞ்சாப் காவல்துறையின் 200 காவலர்கள் காத்திருக்கின்றனர்.

நவ்நீத் சதுர்வேதி
நவ்நீத் சதுர்வேதி

நவ்நீத் சதுர்வேதி காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில், நவ்நீத் சதுர்வேதி வழக்கறிஞர்கள் முன்ஜாமீன் கோரியும், பஞ்சாப் காவல்துறை அவரைக் கடத்திச் செல்ல முயல்வதாகவும், மாநிலங்களவைக்கான அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி,கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவ... மேலும் பார்க்க

கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்

வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுர... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள்

விருதுநகரில் தீபாவளிக்காக பணம் வசூலித்த 3 தீயணைப்பு வீரர்களை பணியிட மாற்றம் செய்து தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த வினோத்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக் சென்றவரை தாக்கி பணம், நகை கொள்ளை; நண்பர் ஏவிய கும்பல் வெறிச்செயல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார். சிவகாசி ரிசர்வ... மேலும் பார்க்க