போலோ விளையாடியபோது மாரடைப்பு; நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு பின்னர் 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.
சஞ்சய் கபூர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இருந்தார். இதனால் அவர்களின் விவாகரத்து பெரிதும் பேசப்பட்டது.
இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. தொழிலதிபரான சஞ்சய் கபூர் போலோ விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் தேசிய அளவில் சிறந்த போலோ வீரராகவும் இருக்கிறார்.
அவர் லண்டனில் போலோ விளையாடுவதற்காக சென்றிருந்தார். அங்கு அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே போட்டியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து போட்டியில் இருந்து வெளியில் வந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் இறந்து போனார். சஞ்சய் கபூர் விளையாடிக்கொண்டிருந்த போது அவரது தொண்டையில் ஒரு தேனீ கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சஞ்சய் கபூர் மரணத்திற்கு தொழில்துறையினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சஞ்சய் கபூர் சொந்தமான போலோ அணி ஒன்றை வைத்திருக்கிறார்.
அவர் நடிகை கரிஷ்மா கபூரை விவாகரத்து செய்த பிறகு பிரியா சச்சிதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கரிஷ்மா கபூரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக பேஷன் டிசைனர் நந்திதா என்பவரை திருமணம் செய்தார். சஞ்சய் கபூருக்கு இந்தியா, சீனா, மெக்சிகோ, செர்பியா நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கிறது. அதோடு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.