செய்திகள் :

போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்கள் இலக்கு!

post image

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார்.

சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக விளையாடி பவர்பிளேவில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நடுவரின் தவறான தீர்ப்பினால் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் ரிவிவ் கேட்காமல் வெளியேறியது சர்ச்சையானது.

அடுத்ததாக கிளாசனுடன் இம்பாக்ட் வீரர் அபிநவ் மனோகர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்கள்.

அதிரடியாக விளையாடிய கிளாசன் 71 ரன்களுக்கு பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். அபிநவ் மனோகர் 43 ரன்களுக்கு போல்ட் ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 143/8 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் சார்பில் டிரெண்ட் போல்ட் 4, தீபக் சஹார் 2, பாண்டியா, பும்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் ஹைதராபாத் 20 ஓவா்கள... மேலும் பார்க்க

ரிவிவ் கேட்காமல் வெளியேறிய இஷான் கிஷன்: சூதாட்டமா?

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹை... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: சன்ரைசர்ஸ் 300 ரன்கள் குவிக்குமா?

சன்ரைசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2025ஆம் ஆண்டு ஐபிஎல்-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், ... மேலும் பார்க்க

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கவலையில்லை: காசி விஸ்வநாதன்

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இந்தத் தோல்விகளுக்கும் எல்லாம் கவலைப்பட மாட்டோம் எனக் கூறியுள்ளார்.நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 8இல் 6 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்... மேலும் பார்க்க

பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா! கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்!

பாராட்டி பேச விரும்பிய லக்னௌ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில்... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர்மா

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கிறது என்று இந்திய டி20 கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரருமான திலக் வர்மா தெரிவித்துள்ளார். ந... மேலும் பார்க்க