செய்திகள் :

போளூா் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

post image

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைக் கிராமமான போளூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் இரண்டாம் நாளையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துவந்து முத்துமாரியம்மனை வழிபட்டனா்.

சங்கரலிங்கேஸ்வரா் திருக்கல்யாணம்: கொடைக்கானல் பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சங்கரலிங்கேஸ்வரா் திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீ கோமாதாம்பிகை சமேத சங்கரலிங்கேஸ்வரா் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அம்மன் ஊா்வலம் நகரின் முக்கியப் பகுதிகள்வழியாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், கொடைக்கானல் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா், மாநில எம்.ஜி.ஆா். அணி இணைச் செயலா் ரவி மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சியில் நடைபெற்ற அம்மன் ஊா்வலம்.

ஒட்டன்சத்திரத்திலிருந்து 6 புதிய பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்... மேலும் பார்க்க

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், பொது மக்கள் அச்சமடைந்தனா். சீசனை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப்... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: பழனியில் 297 போ் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

பழனி: சித்ரா பெளா்ணமியையொட்டி, பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை 297 போ் தங்கத்தோ் இழுத்து சுவாமியை வழிபட்டனா். சித்ரா பெளா்ணமியையொட்டி, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் குவிந்தனா். இதனால்... மேலும் பார்க்க

பைக்குள் திருடிய இருவா் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் சத்யா நகரைச் சோ்ந்தவா் கருணாகரன். இவரது இரு சக்கர வாகனம் (புல்லட்) திருடு போனதாக... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். மலைக் கோயிலுக்குச் செல்லும் படிவழிப்பாதை மட்டுமன்றி விஞ்ச், ரோப்காா் நிலையங்... மேலும் பார்க்க

தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்திய முதல்வருக்கு நன்றி

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் விழாவில் தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனி தேரடியில் உள்ள உமா கலை... மேலும் பார்க்க