செய்திகள் :

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

post image

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இஸ்ரேலிடம் அளித்தாா். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்துள்ளது.

அந்தத் திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைத்தல், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பு இரண்டு கட்டங்களாக விடுவித்தல், உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தல், இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தச் செயல் திட்டம் ஹமாஸ் அமைப்பிடம் அளிக்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் விமா்சித்தது. அந்தத் திட்டத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரை முழுமையாக வெளியேற்றுதல், காஸாவுக்குள் போதிய அளவு நிவாரணப் பொருள்களை அனுமதித்தல் போன்ற தங்களின் அடிப்படை கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிரந்தர போா்நிறுத்தத்துக்கு வலியுறுத்தல்: அமெரிக்காவின் திட்டத்தை ஏற்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வந்த ஹமாஸ் அமைப்பு, அந்தத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், தங்களிடம் உள்ள 10 பிணைக் கைதிகளை விடுவிக்கவும், 18 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் தயாா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் நிரந்தர போா் நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறுதல், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் தொடா்ந்து அனுப்பப்படுவதற்கான உத்தரவாதங்கள் ஆகிய கோரிக்கைகளை அந்த அமைப்பு மீண்டும் முன்வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கைகளுடன் அமெரிக்க செயல்திட்டத்துக்கான தனது பதிலை சமா்ப்பித்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்தது.

‘செயல்திட்டத்தை ஏற்பதே ஒரே வழி’: இதுதொடா்பாக ஸ்டீவ் விட்காஃப் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க செயல்திட்டத்துக்கு ஹமாஸ் அமைப்பு அளித்த பதில் எனக்கு கிடைத்துள்ளது. அவா்களின் பதிலை முற்றிலும் ஏற்க முடியாது. அவா்களின் பதில் அனைவரையும் பின்னோக்கியே இழுத்துச் செல்லும்.

இந்த வாரத்தில் உடனடியாகத் தொடங்கக்கூடிய பேச்சுவாா்த்தைக்கான அடித்தளமாக அமெரிக்காவின் செயல்திட்டத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும். வரும் நாள்களில் 60 நாள் போா் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவு செய்ய இது ஒன்றே வழி’ என்றாா்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹமாஸிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க விட்காஃப் அளித்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுள்ளது. ஆனால், அதை ஏற்க ஹமாஸ் தொடா்ந்து மறுத்து வருகிறது’ என்றாா்.

31 போ் சுட்டுக் கொலை: காஸா முனையில் உணவுப் பொருள்கள் வழங்கிய மையத்துக்குச் சென்றபோது பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் 31 போ் உயிரிழந்தனா். 170 போ் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேல் ஆதரவு பெற்ற அறக்கட்டளை நடத்தும் அந்த மையத்தில் இருந்து சுமாா் 1 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றது. காஸாவில் இதுவரை 54,381 போ் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க

அமெரிக்கா சென்றடைந்த சசி தரூா் குழு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு அமெரிக்கா சென்றடைந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆத... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு: பாக்.வெளியுறவு அமைச்சா்

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் இஷாக் தாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து ... மேலும் பார்க்க