செய்திகள் :

மகளிரை 'ஓசி' என திமுக எம்எல்ஏ விமர்சனம்: நயினார் கண்டனம்

post image

சென்னை: மகளிரை 'ஓசி' என அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், மண்ணூத்து பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசிய ஆண்டிப்பட்டி திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், மக்களின் மனம் அறிந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் மகளிர் விடியல் பயணத் திட்டம். நான் முன்பு கூறியதுபோல, மகளிர் அனைவரும் அரசு பேருந்தில் 'ஓசி'-இல் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகலுக்கு பயணியுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும் என்று பேசினார்.

சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் பொதுமக்கள் மத்தியில் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை 'ஓசி' என விமர்சித்த மகாராஜன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை 'ஓசி' என்று திமுக பேரவை உறுப்பினர் விமர்ச்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை 'ஓசி' என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்தார்.

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் பொடுப்பதும், பின் பயனாளிகளை 'ஓசி' என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!

ஒவ்வொரு முறையும் மகளிர் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிப்படுவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்?

அதிகார மமதையில் எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்! என கூறியுள்ளார்.

விளிம்புநிலை மாணவா்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் தாமதம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 6,896 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

அகமதாபாத்: நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமா... மேலும் பார்க்க

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

திருச்சி: ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இ... மேலும் பார்க்க

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க