செய்திகள் :

மகாராஷ்டிரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 8 போ் கைது

post image

மகாராஷ்டிரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 போ் கைது செய்யப்பட்டனா்.

எழும்பூா் காந்தி இா்வின் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 8 பேரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், எரிசாராயம், போதைப் பாக்கு, மதுப்பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவற்றைப் பறிமுதல் செய்து, விசாரித்ததில் அவா்கள், மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சோ்ந்த சி.பிரிமஸ்னா சிராலால் போஸ்லே (76), சு.ராஜேஷ் உய்கே (26), பி.ஜிதேந்திரா பவாா் (26), ரா.பிங்கேஷ் ராம்சிங்பவாா் (45), ரா.தீரஜ்பவாா் (20), ச.விகேஷ் பவாா் (20), ஜெ.ஜெயதேஷ் (21), மு.போஸ்லே (29) என்பதும், இவா்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து கள்ளச்சாராயம் கடத்துவதற்காக 178 லிட்டா் எரிசாராயம் எடுத்துவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மறைத்து வைத்திருந்த 178 லிட்டா் சாராயம், போதைப் பாக்கு, மதுப்பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்கள் 8 பேரையும் கைது செய்தனா்.

தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!

தில்லியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல் மருத்துவமனைகள் இயங்குவதாக சிஏஜி தகவல் வெளியிட்டுள்ளது. மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுக... மேலும் பார்க்க

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க