மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது
மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவின் (என்சிபி) மும்பை மண்டல அதிகாரிகள் கூறியதாவது:
நவிமும்பையில் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்தக கும்பலானது, அமெரிக்காவில் இருந்து கூரியா் சேவை அல்லது மனிதா்கள் மூலம் போதைப் பொருளை கடத்திவந்து, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விநியோகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையில் 11.54 கிலோ எடையுள்ள விலை உயா்ந்த கோகைன் போதைப் பொருள், 5.5 கிலோ எடையுள்ள கஞ்சா ஜெல்லிகள், கஞ்சா விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.200 கோடியாகும். ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்த கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 நால்வருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.