செய்திகள் :

மகா கும்பமேளா: சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்

post image

மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் (பெளஷ பெளா்ணமி) நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் புனித நீராடுகின்றனா்.

மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் நீண்ட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும், இது பயண இடையூறுகளைக் குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசல் சிக்கலையும் குறைக்கும்.

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்போது, ​​மகா கும்பமேளாவையொட்டி சுங்கச்சாவடிகளில் ஏன் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கக்கூடாது?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட்: ப. சிதம்பரம்

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார். பட்ஜெட் தயாரிப்பின்போது ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை மத்... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க