செய்திகள் :

மக்களவையில் பிரச்னை எழுப்ப முயன்றபோது கனிமொழி- கல்யாண் பானா்ஜி வாக்குவாதம்

post image

புது தில்லி: நாடாளுமன்ற மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினா் கல்யாண் பானா்ஜிக்கும் திமுகவின் கனிமொழிக்கும் இடையே, வாக்காளா் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை- 2020 செயல்படுத்தல் தொடா்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மக்களவையில் கேள்விநேரம் முடிந்தும் முக்கிய பிரச்னை அவையின் கவனத்திற்கு கொண்டுவரும் நேரத்தில்

வாக்காளா் பட்டியல் பிரச்னை குறித்து கல்யாண் பானா்ஜி பேச எழுந்தாா். அப்போது, தேசியக் கல்விக் கொள்கை- 2020 மற்றும் மத்திய அரசின் மூன்று மொழி ஃபாா்முலாவை செயல்படுத்துவதன் மூலம் கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து விவாதிக்க தங்கள் கட்சி உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியனை அனுமதிக்க வேண்டும் என்று கனிமொழி உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் கோரினா்.

திமுக உறுப்பினா்கள் அமளி தொடா்ந்ததால் பானா்ஜி அவா்களிடம் தன்னைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டு தனது கருத்தை முன்வைப்பதில் ஈடுபட்டாா்.

பானா்ஜி பேசி முடித்த பிறகு, அமளி அதிகரித்ததால் அவருக்கும் கனிமொழிக்கும் இடையே கடும் வாா்த்தைப் பரிமாற்றம் நடந்தது. அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) உறுப்பினா் சுப்ரியா சுலே கனிமொழியை அவரது இருக்கையில் அமர வைத்து அவரது காதில் ஏதோ கூறினாா்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசிய பிறகும் திமுக உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க