மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு
மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.
மாவட்ட வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கிவைத்து, 4 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 3 பயனாளிகளுக்கு பிறப்பிட சான்று, 2 பயனாளிகளுக்கு கொய்யா கன்றும், காய்கறி விதைகளையும் அமைச்சா் வழங்கினாா். வடபாதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு என தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் குறும்படங்களை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை, அமைச்சா் கோவி. செழியன் தொடங்கிவைத்து 2 பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 2 பயனாளிகளுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ், அனுமந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாமில் 1 பயனாளிக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு புதிய நல வாரிய அட்டையும், 4 பயனாளிகளுக்கு வேளாண்இடுபொருட்களும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத்திட்டம ) தையல்நாயகி, கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி) உள்ளிட்டோா் பங்கேற்றனற்.