செய்திகள் :

மக்கள்தொகை கணக்கெடுப்பு! என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம்?

post image

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டமாக, நாடு முழுவதும் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியானது தொடங்கவிருக்கிறது.

இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கிடும் பணியின்போது, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படவிருக்கின்றன.

இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் குறித்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு சுமார் 29 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதன்படி, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, பெரியவர்கள், சிறியவர்கள், பெயர், வயது, பாலினம், கல்வித் தகுதி, பணி வாய்ப்பு, உணவு தானிய நுகா்வு, குடிநீா் ஆதாரம், மின்சாரம், எந்தவிதமான கழிப்பறை வசதி, கழிவுநீா் அமைப்பு, எந்தவிதமான சமையல் எரிபொருள் பயன்பாட்டில் உள்ளது, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, என்ன வகையான வீடு (தரை-சுவா்-மேற்கூரை) உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.

மேலும், தொலைபேசி, செல்போன் வசதி, இணையதள வசதி, வைத்திருக்கும் வாகனங்கள், குடும்பத் தலைவர், அவருடன் மற்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உறவு, குடும்பத் தலைவர் ஆணா? வேலை, வேலைக்குச் சென்று வரும் முறை, தாய்மொழி, மாற்றுதிறனாளி யாரேனும் இருக்கிறாரா? திருமண விவரம், மதம், திருமணமானவர் இருப்பின், திருமணமான வயது, கடைசியாக வாழ்ந்த இடம், இடம்பெயர்ந்த காரணம், தற்போதிருக்கும் இடத்தில் வாழும் காலம், பிள்ளைகள் விவரம், கடந்த ஓராண்டில் பிறந்த குழந்தைகள் இருந்தால் அவர்கள் விவரம் உள்ளிட்ட விவரங்களும் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை தலைமைப் பதிவாளா் அலுவலகம் தயாரித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

நாட்டின் 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணி தொடங்குவது குறித்து இந்திய தலைமைப் பதிவாளரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்சய் குமாா் நாராயண், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, வீடுதல் பட்டியலிடும் நடவடிக்கை மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பின்போது, வீடுகளின் நிலவரம், சொத்து விவரம், வீட்டில் இருக்கும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படவிருக்கின்றன.

இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதில்தான், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி 2027, பிப்ரவரி 1 முதல் தொடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடைபெறவிருக்கிறது.

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந... மேலும் பார்க்க

சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர்.கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந... மேலும் பார்க்க

புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர்.... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும்... மேலும் பார்க்க

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருக... மேலும் பார்க்க