செய்திகள் :

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

post image

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில்,

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்தின் முதல் படியாகும். மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவு சமூகப் பாதுகாப்பு, இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடுகளுக்கான தன்னிச்சையான வரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் எல்லை நிர்ணயப் பணி மக்கள்தொகை கணக்கெடுப்பால் கண்டறியப்பட்ட சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும். விளிம்புநிலை குழுக்களுக்கான விகிதாசார அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். தொகுதிகளின் மறுவரையறை மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளுக்கு உணர்திறன் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவைகள், இந்திய நாடாளுமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவக் கொள்கையின் அடிப்படையில் அவை விரிவுபடுத்தப்படுத்த வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான முடிவு நாட்டின் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாக இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகப் போராடிய லட்சக்கணக்கானவர்கள் தரவுகளை மட்டுமல்ல, கண்ணியத்தையும், அதிகாரமளிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

பொது வளங்களின் முக்கிய பயனாளியாக இருந்த தனியார்த் துறை, சமூக நீதி கட்டாயங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட முடியாது. ஏனெனில் நிறுவனங்கள் சலுகை விகிதங்களில் நிலம், மின்சார மானியங்கள், வரி விலக்குகள், உள்கட்டமைப்பு ஆதரவு மற்றும் வரி செலுத்துவோர் பணத்தால் நிதியளிக்கப்பட்ட பல்வேறு நிதி சலுகைகள் உள்ளிட்ட கணிசமான நன்மைகளைப் பெற்றுள்ளன. அதற்கு ஈடாக, அவை நமது நாட்டின் சமூக அமைப்பைப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமானது.

பிகாரின் ஒத்துழைப்பைப் பிரதமருக்கு உறுதியளிக்கும் வகையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு அடிப்படை யதார்த்தங்களுக்குப் பலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளை உண்மையான சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்:முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை(மே.7) ஆலோசனை நடத்தி வருகிறார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: இந்தியர்கள் மூவர் பலி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! - ராகுல்

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க