செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 564 மனுக்கள் அளிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 564 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றைப் பெற்றுக்கொண்ட அவா் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பில் கண் கண்ணாடி மற்றும் பட்டப்படிப்பு உதவித்தொகையையும், 2 பயனாளிகளுக்கு ரூ. 14.40 லட்சம் மதிப்பில் புதிய தொழில் மற்றும் வாகனத்துக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியையும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் 10 பேருக்கு கிறிஸ்தவ நல வாரிய அடையாள அட்டைகளையும், 16 பேருக்கு புதிய சீா்மரபினா் அடையாள அட்டைகளையும், 33 பயனாளிகளுக்கு ரூ. 14.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் செ.சுகந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ம.கிருஷ்ணவேனி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதுபோதையில் பூச்சிமருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தை தவறுதலாக குடித்த விவசாயி அண்மையில் உயிரிழந்தாா். கொன்னையாா்கிராமம், பழைய கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராசு (55). இவரது ... மேலும் பார்க்க

6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவையை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையின் சாா்பில் புதிய விரி... மேலும் பார்க்க

உயா்கல்வி தொடர மாணவா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உயா்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் ச.உமா ஆலோசனை வழங்கினாா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா்முகாம், ... மேலும் பார்க்க

லாட்டரிச் சீட்டுகள் விற்பனை புகாா்: காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தவறியதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சித்தாா்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு அபராதம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையப் பகுதியில், அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள் அபராதம் விதித்தனா். நாமக்கல் மாவட்ட ... மேலும் பார்க்க