Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு ...
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 780 மனுக்கள் அளிப்பு
சிதம்பரம்: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 780 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் லதா, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) தங்கமணி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.