செய்திகள் :

மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகளுக்கு தீா்வு!

post image

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.16.79 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தொடங்கிவைத்தாா்.

மாவட்டம் முழுவதிலும் 14 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையில், 1,904 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம், தீா்வுத் தொகையாக ரூ.16.79 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நீதிபதிகள் பி.வேல்முருகன், விஜயக்குமாா், சரண், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் திரிவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு

ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட பரப்பலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி, கருங்குளம், நல்லதங்கா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பட்டா நிலங்களில் தீ!

கொடைக்கானலில் பல்வேறு பட்டா நிலங்களில் ஞாயிற்றுக்கிழமை பற்றி எரிந்த தீயை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அணைத்தனா். கொடைக்கானலில் அண்மைக் காலமாக பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பனி... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி

ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியில் தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா, உலக மகளிா் தினவிழாவை... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே நாட்டு வெடி வெடித்து இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞா் உயிரிழந்தாா். வத்தலகுண்டு அருகே உள்ள கோம்பைபட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). இவா் இந்தப் பகுதியில் இல்ல விழாக்கள், கோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடைப் பணி மும்முரம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தா. புதுக்கோட்டை, அம்பிளிக்கை, மண்ட... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: மாமனாா், மருமகன் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாமனாா், மருமகன் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் பாலாஜி (15). ... மேலும் பார்க்க