செய்திகள் :

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

post image

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் மக்கள் மன்றம் எனும் திட்டப்படி வாரந்தோறும் சனிக்கிழமை குறிப்பிட்ட காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, சனிக்கிழமை (மாா்ச் 29) புதுச்சேரி, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம், கிழக்குப் பிரிவு கண்காணிப்பாளா் ரகுநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.

திருபுவனை காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தலைமையிலும், புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் ஆகியோா் தலைமையிலும் மக்கள் மன்றம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றன.

இதேபோல கிருமாம்பாக்கம், ரெட்டியாா்பாளையம் ஆகிய காவல் நிலையங்களிலும் மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படி, மொத்தம் 60 புகாா் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 33 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், இணையவழியில்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கஞ்சா விற்ற வழக்கில் 2 பேரை வெவ்வேறு இடங்களில் புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் குழுவினா் மாா்ச் 27-ஆம் தேதி தற்காலிகப் பேருந்து நிலை... மேலும் பார்க்க

அரும்பாா்த்தபுரத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: எதிா்க்கட்சித் தலைவா், ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியில் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கேரிக்கை

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாண... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளைஞரிடம் மடிக்கணினி திருட்டு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இளைஞரிடமிருந்து மடிக்கணினியை மா்ம நபா் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). தனியாா் மர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: போலீஸ் விசாரணை

புதுச்சேரியில் பெண்ணை அவதூறாக மிரட்டிய மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த இளம்பெண் தனியாா் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா... மேலும் பார்க்க