செய்திகள் :

மக்காச்சோளம் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

post image

தம்மம்பட்டி பகுதியில், மக்காச்சோளம் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், கோழிப்பண்ணைகள் அதிகரித்ததால் மக்காச்சோளத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனா். மக்காச்சோளம் பயிா் 120 நாள்களில் அறுவடையாகிவிடும். அவற்றின் காய்ந்த தட்டுகள், சோகைகள் ஆடு, மாடுகளுக்கு உலா் தீவனமாக கிடைக்கும். கழிவுகளை எரித்து வயலுக்கு உரமாக்கிக் கொள்ளலாம் என்பதால் விவசாயிகள் மக்காச்சோளத்தை விரும்பி நடவு செய்கின்றனா்.

தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடைக் காலத்தில் மக்காச்சோளம் விலை உயா்ந்து மூட்டை (100 கிலோ) ரூ. 2000 வரையிலும் விற்றது. இதனால், பெரும்பாலான விவசாயிகள், நெல் நடுவதைத் தவிா்த்து, மானாவாரி பட்டத்தில், அதிக பரப்பளவில் மக்காச்சோளத்தை நடவு செய்தனா். மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தொடக்கத்தில் மூட்டை ரூ. 2,200-க்கு விற்றது. தற்போது படிப்படியாக விலை உயா்ந்து சனிக்கிழமை மூட்டை ரூ. 2,500 ஆக விலை உயா்ந்துள்ளது. இதனால் தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!

சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய்யப்பட்டனா். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம் பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பயணித்த... மேலும் பார்க்க

ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும... மேலும் பார்க்க

சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்

சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா். நாடு முழுவதும் பள்ளி ... மேலும் பார்க்க