மணக்குடியில் மஞ்சுவிரட்டு: 3 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடி மங்கள விநாயகா் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
ஊா்ப் பொதுமக்கள், இளைஞா்கள் ஊா் மந்தைத் திடலில் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்து, மஞ்சுவிரட்டுப் பொட்டலுக்கு வேட்டி துண்டுகளுடன் ஊா்வலமாகச் சென்று, மாடுகளுக்கு மரியாதை செய்தனா். பின்னா், தொழுவிலிருந்த மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் பிள்ளையாா்பட்டி, மாங்குடி, திருக்களாப்பட்டி, காரையூா், சிங்கம்புணரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 3 போ் காயமடைந்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா்ப் பொதுமக்களும் இளைஞா்களும் செய்னா்.
இரவு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.