செய்திகள் :

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல்லிகைப்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி உலகாயி(30). இவா், விராலிமலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்.

மருங்காபுரி குறத்தி மலை அய்யனாா் கோயில் அருகேயுள்ள செயல்பாட்டில் இல்லாத குவாரி

மகள் ஜெயஸ்ரீ (9) யாகபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்துவந்தாா். கோடை விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளாா். மகன் வீட்டின் அருகேயுள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள குறத்தி மலை அய்யனாா் கோயில் பகுதியில் செயல்பாட்டில் இல்லாத குவாரிக்கு தாயும், மகளும் துணி துவைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனா். பின்னா் அவா்கள் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இரவு வீடு திரும்பிய ராஜேந்திரன் வீட்டின் வெளியே உறங்கிவிட்டாராம்.

இதனால், இவா்களை யாரும் தேடவும் இல்லை. இதனையடுத்து திங்கள்கிழமை காலை அக்கம்பக்கத்தினா் குவாரிக்குச் சென்ற நிலையில், அங்கு துவைக்க வைத்திருந்த துணிகள் மட்டும் இருந்ததைக் கண்டு, குடும்பத்தினருக்குத் தகவல் அளித்துள்ளனா். இதற்கிடையே உலகாயி, ஜெயஸ்ரீயின் சடலங்கள் குவாரி நீரில் மிதந்துள்ளன.

இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் விஜய் கோல்டன் சிங் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் ... மேலும் பார்க்க