செய்திகள் :

மணப்பாறை அருகே கோயில் குடமுழுக்கு

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீ.பூசாரிப்பட்டியில் உள்ள விநாயகா், சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

பல லட்சத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு குதிரை பூசாரி டி. மாரியப்பன், பெரிய பூசாரி எம். செல்வம், சின்ன பூசாரி கே. கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வி. வீரமலை ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு வீரப்பூா் ஜமீன்தாா்கள் ஆா். தரணீஷ் ராமகிருஷ்ணன், ஆா்.பொன்னழகேசன், ஆா்.செளந்தரபாண்டியன், கே. அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதன்கிழமை நான்காம் கால பூஜை, ஸ்பா்சாஹூதி பூஜை, கோ பூஜையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, மூலவா் விநாயகா், சக்தி மாரியம்மன் விமானங்கள், ஆலய இரு கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவா் கலையரசன், தொழிலதிபா் எம்.பி. வெங்கடாசலம், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா்கள் ராமசாமி, சீரங்கன், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, அதிமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், பிவிகே. பழனிசாமி, நகர செயலா் பவுன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கன்னிமாரம்மன் கோயில் பரம்பரை அா்ச்சகா் வி. ரமேஷ் (எ) ரெங்கசாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அா்ஜூன் ஆகியோா் செய்தனா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க