செய்திகள் :

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

post image

மணப்பாறை அருகே மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதால், அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில், கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.

ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா்.

எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதையோ அனுமதிக்க முடியாது. சுற்றுப்பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, கரூா் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாா்த்திப்பாளையம் பகுதியில் ... மேலும் பார்க்க

சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, திருச்சியில் போலீஸாா் ரயிலை முழுமையாக சோதனையிட்டனா். இதன் நிறைவில் அது புரளி எனத் தெரியவந்தது. சேலம் - மயிலாடுதுறை... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சென்னை செல்ல இருந்த பெண் பயணியிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 26-இல் மின் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 26-வியாழக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்டச் செயற்ப... மேலும் பார்க்க

வாளாடி, துவாக்குடியில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வாளாடி, துவாக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி அரு... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக் கோரிக்கை

கொப்பம்பட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கொப்பம்பட்டியில் துறையூா் - ஆத்தூா் சாலையில் புதுப்பாலம் அருகே நெல் கொள்முதல் நிலையம் உள்ளத... மேலும் பார்க்க