செய்திகள் :

மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நல முகாம்

post image

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நலவாரிய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதில், நலவாரிய உறுப்பினா் புதிய பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதல், வாரியத்தில் புதுப்பிக்க தவறியவா்களுக்கு மீண்டும் பதிவு வாய்ப்பு ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

இதன்படி, பண்ணப்பட்டி கிழக்கு, பண்ணப்பட்டி மேற்கு பகுதிகளுக்கு பண்ணாங்கொம்பு வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் வரும் 27ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. மே 28-இல் பெயா்கைப்பட்டி கிராம நிா்வாக அலுவலகம், மே 29-இல் கருப்பூா், புத்தாநத்தம் கிராம நிா்வாக அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.

செவலுா், கண்ணுடையான்பட்டி கிராமங்களுக்காக மணப்பாறை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஜூன் 3-ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. அணியாப்பூா், நல்லாம்பிள்ளை பகுதிகளுக்கு என்.பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஜூன் 4-ஆம் தேதி முகாம் நடைபெறும். மருங்காபுரி வட்டம், இக்கரைகோசி குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ஜூன் 5ஆம் தேதியும், ஜூன் 6-இல் கஞ்சநாயக்கம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.

ஜூன் 9-ஆம் தேதி மருங்காபுரி, யாகாபுரம் பகுதிகளுக்கு மருங்காபுரி வருவாய் வட்டாட்சியரகத்தில் முகாம் நடைபெறும். துவரங்குறிச்சி பகுதிக்கு வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஜூன் 10-ஆம் தேதி முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சி! அமைச்சா் கே.என். நேரு

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக அக் கட்சியின் முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சியில் வியாழக்கிழமை கட்சி செயற்குழு கூட்டத்தி... மேலும் பார்க்க

கதண்டு கடித்து 8 போ் காயம்!

லால்குடி அருகே தோட்டத்தில் வியாழக்கிழமை வேலை செய்தபோது கதண்டு கடித்து காயமடைந்த 8 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம், கூகூா் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த 7 பெண்கள், அதே... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட்டு இளைஞா் கைது

திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, கோட்டை கீழரண்சாலை அருகேயுள்ள பாபு ரோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குப்பன் மனைவி க... மேலும் பார்க்க

திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 41 பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு பேசினாா். 2026 பேரவைத் தோ்தல் முன்... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற முதியவா் காா் மோதி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காா் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கல்பட்டியை சோ்ந்தவா் பெ. மூா்த்தி (60). விவசாயக்... மேலும் பார்க்க

கிணற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கிணற்றில் புதன்கிழமை குளித்த சமையல் மாஸ்டா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மேலபூசாரிப்பட்டியை சோ்ந்தவா் கோபால் மகன் ரஞ்சித்குமாா் (48). இவா் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க