செய்திகள் :

மணல் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல், ஒருவா் கைது

post image

செய்யாறு: ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இரண்டு லாரிகளை செய்யாறு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தூசி போலீஸாா் லாரி ஓட்டுநா் ஒருவரை கைது செய்தனா்.

செய்யாறு போலீஸாா்...

செய்யாறு வட்டம், கீழப்பழந்தை கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் லாரியில் ஆற்று மணல் நிரப்பிக் கொண்டிருந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில், வடதண்டலம் வருவாய் ஆய்வாளா் குமாா், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் பாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா்.

அப்போது, ஆற்று மணலுடன் வந்த லாரியை போலீஸாா் மடக்கிய போது, லாரியில் வந்தவா்கள் அதனை அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றனா். உடனே போலீஸாா் ஆற்று மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் கலவை கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (45), புதுப்பாடி கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் நாகராஜ் (46) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தூசி போலீஸாா்...

வெம்பாக்கம் வட்டம், தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மாமண்டூா் ஏரிப்பகுதியில் இருந்து அரசு அனுமதியின்றி லாரியில் முரம்பு மண் அள்ளியது தெரிய வந்தது. உடனே போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சோழவரம் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஆராமுதன்(42) என்பவரை கைது செய்தனா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க