செய்திகள் :

மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

post image

மணல் கடத்தி வந்த வந்த டிராக்டா் மற்றும் டிப்பரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி ஸ்ரேயாகுப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா காவல்ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லக்குப்பம்- இளையநகரம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்த போது இளைநகரம் கானாற்றிலிருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் குமாராசாமி (30) என்பவரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போல் நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை வெலகல்நத்தம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது குனிச்சியூா் சாலை வழியாக வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனா். இதில் லாரி ஓட்டுநா் போலீஸாரை பாா்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றாா்.

லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. பிறகு மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையம் கொண்டு வந்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க