செய்திகள் :

மணிக்கணக்கில் இயர்போன் பயன்படுத்திய பெண்; காது கேளாமையால் பாதிக்கப்பட்டது எப்படி?

post image

வயர்லெஸ் இயர்போன்களை பலரும் இன்று பயன்படுத்தி வருகின்றனர். பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அல்லது சத்தம் வெளியே வரக்கூடாது என்பதற்காகவும் இயர்போன்களை தினமும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இயர்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை வரை பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

ஒப்பனை கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்தியதால் கிட்டத்தட்ட 45% காது கேட்கும் திறனை இழந்ததாக கூறியிருக்கிறார்.

ஆருசி என்ற பெண்ணின் பதிவின்படி, டெல்லிக்கு செல்லும்போது அவர் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தனது இயர்போன்களை பயன்படுத்தி இருக்கிறார்.

மறுநாள் காலையில் அவரது இடது காது, கேட்கும் திறனை இழந்ததாக குறிப்பிட்டார், ஆரம்பத்தில் அதை நிராகரித்தவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவரை அணுகி பரிசோதித்திருக்கிறார்.

இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தியதால் அவரது இடது காதில் 45% காது கேளாமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். திடீரென ஏற்பட்ட காதுகேளாமையை சரி செய்ய மருத்துவரிடம் அணுகியபோது அவருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

காதில் ஸ்டெராய்டுகள் செலுத்தியதாகவும், ஊசி போன்ற சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கையாக ஸ்பீக்கர்களையோ அதிகமான சத்தங்கள் இருக்கும் இடங்களையோ தவிர்க்க மருத்துவர் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இடையில் ஏற்பட்ட காதுகேளாமையை, சிகிச்சை பெற்று சரி செய்யலாம் என்று நம்பிக்கையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மீண்டும் செவித்திறன் கிடைத்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமையில் இருந்து மீள முடியாது என்று குறிப்பிட்டார் அந்த பெண்.

இதனை ஒரு விழிப்புணர்வு பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் எச்சரித்து பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

உலக யோக தினம்: புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி | Photo Album

உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிஉலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிஉலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் ந... மேலும் பார்க்க

Apollo: இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம்

சென்னை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை [Apollo Children's Hospital, Chennai], இன்று தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்த... மேலும் பார்க்க

மதுரை: சர்வதேச யோகா தினத்தை பள்ளி குழந்தைகளோடு கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album

சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர... மேலும் பார்க்க

Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!

இது மாம்பழம் சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? மாம்பழம் கோடையில்தான் சீசன் என்பதால், 'மாம்பழம் சூடு; வெயில் காலத்துல அதைச் சாப்பிட்டா கட்டி வந்துடும்' என்கிற பேச்சு ரொம்ப கா... மேலும் பார்க்க

24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்; காரையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 06-06-2025 அன்று 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர... மேலும் பார்க்க

Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? - டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை

வெயில் காலம் ஆரம்பித்தவுடனே அனைவரும் அருந்தும் பானம் கரும்பு ஜூஸ். கைப்பிடி ஐஸ் கட்டிகளை கரும்பு ஜூஸில் போட்டுவிட்டால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது இந்த ஜூஸை.... மேலும் பார்க்க