செய்திகள் :

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

post image

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மணிப்பூரின், ஜிரிபம், பிஷ்னுப்பூர், காக்சிங், தெங்னௌபால், கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களிலுள்ள மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக, பாதுகாப்புப் படையினர் அங்கு பதுங்கியிருந்த கிளர்ச்சியார்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மத்திர ரிசர்வ் காவல் படை, மணிப்பூர் மாநில காவல் துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை மற்றும் இந்திய ராணுவத்தினர் இணைந்து, மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன், இந்தக் கூட்டு நடவடிக்கைகளில், பல்வேறு ரக துப்பாக்கிகள், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள், மாநில காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், பணப்பறிப்பில் ஈடுபட்ட வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 5 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகப் போர் குண்டு?

இந்தியா மற்றும் மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில், மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் கிடந்த வெடிகுண்டை, பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பத்திரமாக மீட்டு செயலிழக்கச் செயதனர்.

அந்த வெடிகுண்டானது, இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்ததாகக் இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Arrests continue in Manipur. Weapons seized! World War II bomb on the border?

இதையும் படிக்க: குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

கடற்படையில் இணைந்த போர்க் கப்பல் ஐஎன்எஸ் தமால்!

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருநாட்டு கடற்படை அதிகாரிகள் முறையா... மேலும் பார்க்க

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு இளநிலை நீட் மறு தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

இளநிலை நீட் மறு தேர்வு எழுதிய குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.இதனையடுத்து, நா... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்டநெரிசல்: பெங்களூர் கூடுதல் ஆணையரின் பணியிடை நீக்கம் ரத்து!

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விவகாரத்தில் பெங்களூர் கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் கடந்த 2019-ஆம் ஆண்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில், கடந்த ஜூன் 23-ஆம் தேதி அவருக்கு ... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு சம்பவம்! நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானம் 900 அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி கீழே வந்துள்ளது. எனினும், விமானிகள் மீண்டும் விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த சம்பவம் த... மேலும் பார்க்க

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய... மேலும் பார்க்க