செய்திகள் :

மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது

post image

மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 12 கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக திங்களன்று போலீஸார் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கட்சி கங்லீபக்கின் மூன்று தீவிர உறுப்பினர்கள் இம்பால் மேற்கில் உள்ள லங்கோ பகுதியில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள தேங்நெளபால் மாவட்டத்தில் உள்ள கங்லீ யோ கன்ன லப்பின் உறுப்பினரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட மணிப்பூர் தேசிய புரட்சிகர முன்னணியின் பெண் போராளி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி-ஜோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது.

இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை (மாா்ச் 8) முதல் தடையற்ற வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த மாா்ச் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்போக்பி மாவட்டத்தில் குகி-ஜோ பழங்குடியின அமைப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு போராட்டக்காரா் உயிரிழந்தாா். பெண்கள், காவல் துறையினா் உள்பட 40 போ் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தை குகி-ஜோ அமைப்பினா் தொடங்கினா்.

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்

பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மாநிலம் முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன... மேலும் பார்க்க

ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?

ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ ந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.நாட... மேலும் பார்க்க

'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!

ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகார் பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூ... மேலும் பார்க்க

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: மக்களவையில் பாஜக எம்பி

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே திங்கள்கிழமை பேசியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் ... மேலும் பார்க்க