செய்திகள் :

மண்டபத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்புற சாலை மேம்பாடு - 2024-25 திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏ.கே.எஸ்.தோப்பு சாலை, முனைக்காடு சாலைகளில் தாா்ச் சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, எருமை தரவை ஊருணியில் அம்ரூத்-2.0 திட்டத்தில் ரூ.40 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டதுடன் இந்த இரண்டு பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், குடிநீா்த் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டதுடன், பேரூராட்சிகள் துறையின் மூலம் நாள்தோறும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் வழங்கவும், பேரூராட்சிப் பகுதிகளை தூய்மையாக பராமரித்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை உரம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் ஜெயகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் சிட்டி பாபு, மண்டபம் பேரூராட்சிச் செயல் அலுவலா் மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணப... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் மீனவா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராம... மேலும் பார்க்க

வில்லாலுடைய அய்யனாா் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள வில்லாலுடைய அய்யனாா் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் வில... மேலும் பார்க்க

பூங்குளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகேயுள்ள ஏனாதி பூங்குளத்தில் அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 3-ஆம் தேதி கோ பூஜையும், யாக சால... மேலும் பார்க்க