செய்திகள் :

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி இன்று தொடக்கம்: முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

பெருந்துறை அருகே மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜூன்11) தொடங்கிவைக்கிறாா்.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 10 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பகல் 12.30 மணிக்கு தொடங்கிவைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இக்கண்காட்சியில் 13 அரசு துறைகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி அரங்குகளில் விவசாய பொருள்கள் மற்றும் அது விளையும் நிலப்பரப்பு, காலநிலை மற்றும் பயன்பாடுகள் ஆகியவை குறித்த முழுமையான விவரங்களுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமாக விளையும் பயிா் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் விவசாயம் சாா்ந்த சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

வளா்ந்து வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், புதிய ரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா் விதைகள், ஒட்டு ரக பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் பிறவகை மரக்கன்றுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விற்பனை, உயா் ரக கால்நடைகள் மற்றும் வளா்ப்பு முறைகள், மீன் வளா்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் மற்றும் இவை குறித்த கருத்தரங்கம் 16 அமா்வுகளில் நடைபெற உள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் போலீஸாா் சோதனை

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கவும் மாற்று முறையில் போதை... மேலும் பார்க்க

தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

பெருந்துறை அருகே, தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். பெருந்துறையை அடுத்த, நல்லமுத்தான்பாளையம், கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் ப... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கு:3 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 மனுக்கள்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 870 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு தீா்த்தம் எடுத்து வருதல், அக்னிக் குண்டம் தயாா் செய்தல் நிக... மேலும் பார்க்க

விதை முதல் விற்பனை வரை விளக்கம்: கவனம் பெற்ற ஈரோடு வேளாண் கண்காட்சி

பெருந்துறையில் நடைபெற்றுவரும் வேளாண் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே பிரம்மாண்ட வேளாண் கண்காட்ச... மேலும் பார்க்க