செய்திகள் :

"மதன் பாப் ஏ.ஆர் ரஹ்மானின் குரு.." - அனுபவம் பகிர்ந்த கே.எஸ்.ரவிக்குமார்

post image

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மதன் பாப் (71). நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

மதன் பாப் இறப்புக்கு திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இல்லத்துக்கு வந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மதன் பாப்-க்கு புற்றுநோய்

"ஒருவருஷத்துக்கு முன்னாடியே அவருடைய மகன் வேற ஒரு விஷயத்துக்காக என் வீட்டுக்கு வந்தபோது, 'அப்பாவுக்கு கேன்சர் இருக்கு' என்றார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அவரிடம் ஃபோனில் பேசியபோது அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாகப் பேசினார்." என்றார்.

மதன் பாப்
மதன் பாப்

தொடர்ந்து, "மதன் பாப் 'உங்களது அடுத்த படம் எப்போது சார்? எனக்கு வாய்ப்புகொடுக்காமல் இருக்கக் கூடாது' என உரிமையாக கேட்பார். தெனாலிக்குப் பிறகு வில்லன், லிங்கா என என்னுடைய நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

நல்ல மனிதர் எப்போதும் சிரித்துகொண்டே இருப்பார். 'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்'னு சொல்வாங்க. அவரை விட அதிகம் வாய் விட்டு சிரித்தது ரொம்ப கம்மி, குமரிமுத்து மாதிரி ஒருசிலர்தான். அவரை எப்படி நோய் தாக்கியது எனத் தெரியவில்லை..." எனப் பேசினார்.

"ரஹ்மானே அவரிடம் வேலை செய்திருக்கிறார்"

மேலும், "நல்ல மனிதர். நான் என்னுடைய ஒரு நண்பரை இழந்திருக்கிறேன். எனக்கு அவருடன் நிறைய அனுபவங்கள் இருக்கு. தெனாலி ரீ ரெக்கார்டிங்கில்தான் எனக்கு அவர் இசைக்கலைஞர் எனத் தெரியும்.

ரஹ்மான் படத்தைப் பார்த்துவிட்டு, 'இந்த கேரக்டர் இவருக்கு கொடுத்ததற்கு தாங்க்யூ' என்றார். எதற்கு எனக் கேட்டபோது ' இவர் என் குருக்களில் ஒருவர்' என்றார். இவர்கிட்ட ஏ.ஆர்.ரஹ்மானே பணியாற்றியிருக்கிறார். இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்." என்றார்.

Ajith: `கரியர் மட்டும் இல்லாம பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கீங்க'- அஜித் குறித்து நெகிழும் ஷாலினி

அஜித் திரைத்துறையில் 33 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவரின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இது குறித்து சில தினங்க... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "என்னோட இந்தப் படத்தை பார்ட் 2 எடுக்கலாம்; ஆனால்" - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என இரண்டு படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்நிலையில் 'Nasscom' என்ற சேனலுக்கு நேர்காணல் கொடுத்திருக... மேலும் பார்க்க

அகரம் அறக்கட்டளை: "இந்த முயற்சியில் உங்களுக்குச் சேவையாற்றத் தயார்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் 20வது ஆண்டுவிழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று (ஆகஸ்ட் 3) கலந்துகொண்டார்.அந்த நிகழ்வையும் சூர்யாவை வாழ்த்தும் வகையில், "நாம் இருவரும் நே... மேலும் பார்க்க

Meera Mithun: தலைமறைவான நடிகை; தாயார் கொடுத்த மனு- மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், 'எட்டு தோட்டாக்கள்', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் வெள... மேலும் பார்க்க

'ஹீரோயினுக்கு நான் சொல்றவங்களைக் கமிட் செய்யுங்க’னு சொன்னார் ஹெச்.ராஜா!' - 'கந்தன் மலை' இயக்குநர்

முதன்முதலாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா.இவர் நடிக்கும் 'கந்தன் மலை' படத்தின் போஸ்டர் வெளியாகயிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் வீர ம... மேலும் பார்க்க

71-வது தேசிய விருது: ``என் கேள்விகளுக்கு விருது குழு பதிலளிக்க வேண்டும்'' - நடிகை ஊர்வசி விமர்சனம்

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், விக்ராந்த மெஸ்ஸி, சிறந்த நடிகை ராணி முகர்ஜி, சிறந்த துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், மலையாள நடிகர் வ... மேலும் பார்க்க