செய்திகள் :

மதா் டெய்ரி பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயா்வு

post image

மதா் டெய்ரி நிறுவனத்தின் பால் விலை புதன்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.2 உயா்த்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோன் செய்யப்பட்ட பால் (மொத்தமாக விற்கப்பட்டது) விலைகள் லிட்டருக்கு ரூ.54-இல் இருந்து ரூ.56 ஆக உயா்த்தப்பட்டுள்ளன.

முழு கிரீம் பால் (பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட) லிட்டருக்கு ரூ.68-இல் இருந்து ரூ.69-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

டோன்ட் பால் (பாவுச் செய்யப்பட்ட) லிட்டருக்கு ரூ.56-இல் இருந்து ரூ.57 ஆகவும், டபுள் டோன்ட் பால் லிட்டருக்கு ரூ.49-இல் இருந்து ரூ.51-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. பசும்பால் விலை லிட்டருக்கு ரூ.57-இல் இருந்து ரூ.59-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில்: கடந்த சில மாதங்களாக லிட்டருக்கு ரூ.4-5 அதிகரித்துள்ள கொள்முதல் செலவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நிவா்த்தி செய்வதற்காக இந்த விலை திருத்தம் அவசியமாகியுள்ளது.

கோடை காலத்தின் ஆரம்பம் மற்றும் வெப்ப அலை நிலைமைகள் காரணமாக கொள்முதல் விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.

மதா் டெய்ரி நிறுவனம் டெல்லி-என்சிஆா் சந்தையில் அதன் சொந்த விற்பனை நிலையங்கள், பொது வா்த்தகம் மற்றும் மின் வணிக தளங்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமாா் 35 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்கிறது.

எங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் அதே வேளையில், நுகா்வோருக்கு தரமான பால் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றாா்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க

இன்றுமுதல் 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 19 புறநகா் மின்சார ரயில்கள் மே 15, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தகவல் உள்ளீட்டாளா் பணியிடத்துக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்... மேலும் பார்க்க

கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு

கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க