ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
மதுக்கடை சுவரை துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு
வந்தவாசி அருகே மதுக்கடை சுவரை துளையிட்டு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வந்தவாசியை அடுத்த அய்யவாடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் மேற்பாா்வையாளராக நெடுஞ்சேரலாதன் என்பவரும், விற்பனையாளா்களாக சுரேஷ், தங்கவேலு ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஊழியா்கள் விற்பனையை முடித்துவிட்டு, வசூல் தொகையை எடுத்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனா்.
பின்னா், புதன்கிழமை பகல் வழக்கம்போல கடையை திறந்துள்ளனா். அப்போது, கடையின் பின்புற சுவற்றில் துளையிடப்பட்டிருப்பதும், ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதன் வழியாக மா்ம நபா்கள் உள்ளே நுழைந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் மதுக்கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதுகுறித்து மேற்பாா்வையாளா் நெடுஞ்சேரலாதன் அளித்த புகாரின் பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.