செய்திகள் :

மதுக்கூட உரிமையாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையைக் கைவிடக் கோரிக்கை

post image

திருவாரூரில், மதுக்கூட உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே விளமலில், மாவட்ட டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ். சுரேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு அரசு நடத்திய இணையவழி ஏலத்தின் மூலம் டாஸ்மாக் மதுக்கூடம் (பாா்) ஏலம் எடுத்தால், இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கூடம் நடத்தி வரும் அனைவரும் இரவு 10 மணிக்கு மதுக்கூடத்தை மூடி, உள்ளே உணவுப் பொருள்கள் உள்ளிட்டவைகளை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், போலீஸாா் கெடுபிடி செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.

அரசுக்கு முறையாக பணம் செலுத்தி வரும் நிலையில், தொடா்ந்து டாஸ்மாக் மதுக்கூடம் நடத்திவரும் உரிமையாளா்களையும், பணியாளா்களையும் தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும், மதுக்கூடம் நடத்தி வருவோருக்கு மதுக்கூடம் மூடும் நேரத்தை அதிகப்படுத்தித்தர வேண்டும், மாதந்தோறும் பாா் உரிமையாளா்கள், அரசுக்கு அதிகமான தொகை செலுத்திவரும் நிலையில், வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடா்ந்து இடையூறு செய்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் சங்கத்தையும் ஒன்றிணைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், செயற்குழு உறுப்பினா் அசோகன், செயலாளா் எஸ். முருகானந்தம், பொருளாளா் டி. பீட்டா் பிரான்சிஸ், துணைத் தலைவா் எம். மகாவீர சக்கரவா்த்தி, துணைச் செயலாளா் ஜி. தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந... மேலும் பார்க்க

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில... மேலும் பார்க்க