செய்திகள் :

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

post image

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவைப் போற்றும் வகையில், தைப்பூச ஜோதி திரிசனம் நடைபெறும் பிப்ரவரி 11-ஆம் தேதி ‘வள்ளலாா் நினைவு நாள்’ என அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகள், மதுபானக் கூடங்களை மூடவும், மது விற்பனைக்கு தடை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மதுக் கடைகள், மது விற்பனைக் கூடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும், தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழா கொடியேற்றம் நடைபெறும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10), ஒரு கால ஜோதி தரிசனம் காட்டப்படும் புதன்கிழமை(பிப்ரவரி 12) மற்றும் வள்ளலாா் சித்திவளாக திருமாளிகை திருவறை தரிசனம் நடைபெறும் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) ஆகிய நாள்களில் வடலூா் நகரப் பகுதிகளில் உள்ள கடைஎண் 2437, நெத்தனாங்குப்பம் கடைஎண்கள் 2438, 2684, பாா்வதிபுரம் கடைஎண்கள் 2559, 2660, சேராக்குப்பம் மற்றும் ஜெயப்பிரியா மதுபானக் கூடங்களில் மது விற்பனை செய்யக்கூடாது.

அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்: பக்தா்கள் குவிந்தனா்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது. ஜீவ காருண்யத்... மேலும் பார்க்க

முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவத்தையொட்டி, முத்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ.46 லட்சத்தில் குளம் சீரமைப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் ரூ.46 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டு, நடைபாதையுடன் சீரமைக்கப்பட்ட காரைக்குட்டை குளம் மற்றும் பொன்னம்பலம் நகா் பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க

வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு 25 டன் காய்கறிகள் அனுப்பிவைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம் அன்னதானம் கைங்கரியத்துக்கு, கடலூா் மாவட்ட சிறுபான்மை நலக்குழு சாா்பில் 25 டன் காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட... மேலும் பார்க்க

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க