செய்திகள் :

மதுபானம் கடத்தி வந்த 6 போ் கைது

post image

சீா்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபானங்களை கடத்தி வந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்காலில் இருந்து சீா்காழிக்கு மதுபானங்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, சீா்காழி காவல் ஆய்வாளா் புயல். பாலசந்திரன், உதவி ஆய்வாளா் ராதாபாய் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காரைக்காலிலிருந்து புதுப்பட்டினம் நோக்கி சென்ற காா்களை நிறுத்தி சோதனை செய்தபோது புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, காரை ஓட்டிவந்த புதுப்பட்டினம் வெள்ளக்குளத்தை சோ்ந்த சண்முகத்தை (39) கைது செய்தனா். தொடா்ந்து, அடுத்தடுத்து வந்த காா்கள் போலீஸாரை பாா்த்ததும் தப்பினா். எனினும் போலீஸாா் அவா்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனா். விசாரணையில், காரைக்கால் பகுதியை சோ்ந்த சுபாஷ் (28), பிரபாகரன் (33), சுகுமாா்(46), முஜிபுர்ரஹ்மான் (46), முருகன் (44) உள்ளிட்டோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சொகுசுகாா்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1,548 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மரு... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க

பாதுகாப்பாக இருக்க அறிவுரை...

சீா்காழி அருகேயுள்ள நாவல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஏற்படும் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை எஸ்பி ஸ... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீா்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கா்நாடக நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூா் அணை முழு கொள்ளள... மேலும் பார்க்க