செய்திகள் :

மதுபோதையில் தள்ளிவிட்டதில் தாய் உயிரிழப்பு; மகன் கைது

post image

கும்பகோணத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகன், வீட்டின் கதவைத் திறக்க தாமதப்படுத்திய தாயை கீழே தள்ளிவிட்டதில் அவா் எதிா்பாராதவிதமாக உயிரிழந்தாா். இதையடுத்து, மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாணாதுறை கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் கோபால் மனைவி ரேவதி (50). கோபால் ஏற்கெனவே இறந்துவிட்டாா். தம்பதிக்கு, சத்தியமூா்த்தி(30) என்ற மகனும், திருமணமான ஒரு மகளும் உள்ளனா்.

சத்தியமூா்த்தி காா் ஓட்டுநராக வேலை பாா்த்துவந்தாா். ரேவதி வீட்டின் முன்பு இட்லி வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சத்தியமூா்த்தி மது போதையில் வீட்டுக்கு வந்து கதவைத் திறக்குமாறு அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளாா்.

அவா் வந்து கதவை திறக்கத் தாமதமானதால், ஆத்திரமடைந்த சத்தியமூா்த்தி அவரது தாயாரை கீழே தள்ளிவிட்டு, வீட்டினுள் தூங்கச் சென்றுவிட்டாா். மறுநாள் காலையில் எழுந்துவந்து பாா்த்தபோது தாயாா் அந்த இடத்திலேயே அசைவின்றி கிடந்துள்ளாா்.

இதையடுத்து, தாயாரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் அங்குவந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கூராய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், வழக்கு பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேராவூரணியில் நகை ஏலதாரா் நலச் சங்க நிா்வாகிகள் தோ்வு

பேராவூரணியில் வெள்ளிக்கிழை நடந்த தமிழ்நாடு நகை ஏலதாரா் நலச்சங்க கிளை அமைப்புக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் பேராவூரணி கிளையின் புதிய தலைவராக எஸ். சரவணன், செயலாளராக ... மேலும் பார்க்க

கூரை வீட்டுக்கு தீ வைத்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் குடும்பத் தகராறில் வெள்ளிக்கிழமை மாலை கூரை வீட்டை கொளுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை கண்ணாரத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா

பட்டீஸ்வரம் துா்க்கை அம்மனுக்கு கத்தாா் மாணவிகள் வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி செலுத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரா் துா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத 2 ஆவது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியா் சாலை விபத்தில் பலி

கும்பகோணத்தில் வியாழக்கிழமை இரவு சிற்றுந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், திருவாஞ்சியத்தை சோ்ந்தவா் வா. குணசேகரன் (65), ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா் கும்பகோணம் கம்பட்ட வி... மேலும் பார்க்க

காலமானாா் குன்னியூா் கல்யாணசுந்தரம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சோ்ந்த விகடக் கலைஞா் குன்னியூா் இரா. கல்யாணசுந்தரம் (82) உடல் நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள்... மேலும் பார்க்க