செய்திகள் :

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

post image

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் அண்ணா அறிவாலயம் முகப்பு போன்று வடிவமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் முதல்வர், மாலையில் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலையில் இருந்து தொடங்கி சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பேரணி நடத்துகிறார்.

முன்னதாக, '2026 தேர்தல் களத்தில் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை' என்று திமுக பொதுக்குழு கூட்டம் ஏற்பாடுகள் குறித்த ஒரு விடியோவை முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் இந்த மதுரை பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்கா காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!

தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் விநாயகர் சிலை உடைப்பு: நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டூழியம்!

ஆலங்குளத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் ... மேலும் பார்க்க

‘யாா் அந்த சாா்’ கேள்வி எழுப்பினால் இனி நீதிமன்ற அவமதிப்பு!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனைத் தவிா்த்து வேறு எவருக்கும் தொடா்பு இல்லை என்றும், ‘யாா் அந்த சாா்’ எனகேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும்... மேலும் பார்க்க

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள்... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை: செய்திகள் நேரலை

எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?அண்ணா பல்கலை மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை ... மேலும் பார்க்க