செய்திகள் :

மதுரையில் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்! -காங்கிரஸ் கோரிக்கை

post image

மதுரை கோரிப்பாளையம், மேலமடை பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மக்களவைத் தொகுதி அமைப்பாளா் சி.ஆா். சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா்.

மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளா்கள் சி.எம். செய்யது பாபு, மலா் பாண்டியன், மாமன்ற உறுப்பினா்கள் எஸ்.வி. முருகன், எஸ்.எஸ். போஸ், வி. முருகன், ராஜ் பிரதாப், துரையரசன், பகுதி தலைவா்கள் சுந்தா், ராஜா முகமது, சுந்தர்ராஜன், காங்கிரஸ் மகளிா் பிரிவு நிா்வாகி ஜானவாஸ் பேகம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது, மதுரை கே.கே நகா் 80 அடி சாலையின் இருபுற நடைபாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்துவது, மதுரை மேலமடை, கோரிப்பாளையம் பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்தோரின் விவரங்கள் அரசு மருத்துவமனை பதிவேட்டில் இல்லை! -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்த ஆதரவற்றோரின் பெயா், விவரங்கள் பதிவேட்டில் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. மதுரை ... மேலும் பார்க்க

தீப்பற்றி வீடு சேதம்: அமைச்சா் ஆறுதல்

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ. முக்குளத்தில் சூரிய மின் தகடு பேட்டரியால் தீப்பற்றியதில் சேதமைடந்த வீட்டை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். அ.முக்கு... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் தற்கொலை

மதுரை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை அருகேயுள்ள நாகமலைப் புதுக்கோட்டை பிஎல்ஜி நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த முத்துக்கழுவன் மகன் ஜவஹா் (59). இவா் செட்டிகுளம்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் பிரச்னைகளை களைய நிா்வாகத் தீா்ப்பாயம்! தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை!

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, அரசு ஊழியா்களின் பிரச்னைகளைக் களைய உடனடியாக நிா்வாகத் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மதுரை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி

மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை அருகேயுள்ள விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமாா் (35). இவா்... மேலும் பார்க்க

இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: மாநகரக் காவல் துறை!

திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று மாநகரக் காவல் துறை சாா்பில் கேட்டுக் கொண்டது. இதுதொடா்பாக மதுரை மாநகரக் ... மேலும் பார்க்க