மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது.
மருத்துவா் பி. கண்ணன், விளம்பரப் பிரிவு பொது மேலாளா் சிவகுமாா், விபத்து, அவசர சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் நரேந்திர நாத் ஜெனா, பிரபு, பி.ஆா். சுபாஸ் சந்திரன் ஆகியோா் உயிா் காக்கும் கருவியை காவல் கண்காணிப்பாளா் அரவிந்தனிடம் ஒப்படைத்தனா். இந்த நிகழ்வில், காவல் உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு நிபுணா்கள், பாராமெடிக்கல் குழுவுடன் இணைந்து கருவியின் பயன்பாட்டை விளக்கினா்.
பிறகு, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இருதய பிரச்னைகளின் அறிகுறிகளை அடையாளம் காண்பது, அவசரக் காலத்தில் எவ்வாறு முதலுதவி செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இதற்கு முன்னா், மீனாட்சி அம்மன் கோயிலிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் முக்கிய அரசு அலுவலகங்களில் திடீா் இருதய பிரச்னைகளின்போது, உதவி செய்யும் வகையில் இந்தக் கருவிகள் தயாா் நிலையில் இருக்கின்றன.