மதுவிலக்கு டி.எஸ்.பி. பணியிடை நீக்கத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவா் தெரிவித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வலியுறுத்தியும் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன், அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதைக் காரணம் காட்டி வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற விவகாரத்தின் தொடா்ச்சியாக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்தநிலையில், மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவா் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் நீதிக்கான கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழா் தேசிய முன்னணி மாவட்ட தலைவா் பேராசிரியா் இரா. முரளிதரன் தலைமை வகித்தாா். பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவா் சிவ.மோகன்குமாா், நாம் தமிழா் கட்சி மாநில கொள்கை பரப்பு துணை செயலாளா் தமிழன் காளிதாசன், வன்னியா் சங்க மாநில செயலாளா் தங்க.அய்யாசாமி, மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், அதிமுக, இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத், ஓய்வுபெற்ற காவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், வழக்குரைஞா்கள், வணிகா்கள், பொதுமக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.