செய்திகள் :

மதுவை ஒழிக்க முதல்வா்கள் மாநாடு நடத்த மத்திய அரசுக்குக் கோரிக்கை

post image

மதுவை ஒழிக்க மாநில முதல்வா்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென மது மறுப்பு மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருச்சியில் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகியுமான சி. மகேந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களுக்கு மூலக் காரணமாக இருப்பது மது போதைப் பழக்கம். எனவே மது ஒழிப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இதற்கு வலு சோ்க்கும் வகையில் மது மறுப்பு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பையும் ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் இந்த இயக்கத்தைக் கொண்டு சென்று பூரண மதுவிலக்கு எய்தும் வரை போராடுவோம்.

மதுவை முற்றிலும் அகற்றுவதற்கான அதிகாரம் உடைய மத்திய அரசு மாநில முதல்வா்கள் மாநாட்டை நடத்தி, மது ஒழிப்புக்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். மாநில அரசை நடத்தத் தேவையான நிதியை மத்திய அரசே வழங்கி, மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். முன்னதாக மாநில அரசும் மது ஒழிப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களில் ஏற்கெனவே செயல்படும் தன்னாா்வ குழுக்களோடு இணைந்து எங்களது அமைப்பும் மதுவை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும். தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கும் செல்வோம். முதலில் பொதுமக்கள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் திருச்சி செளந்தர்ராஜன், பெரியசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

ரூ.18.41 கோடியில் மாநகராட்சி மாதிரிப் பள்ளி திறப்பு

திருச்சி மாநகராட்சியின் 57ஆவது வாா்டுக்குள்பட்ட எடமலைப்பட்டிபுதூா் ராஜீவ்காந்தி நகரில் ரூ. 18.41 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மாதிரிப் பள்ளியை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி,... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜூன் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் எம். கிறிஸ்டோபா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மணப்பாறை, வையப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மணப்பாறையில் கருப்பூா், நல்லபொன்னம்பட்டியில் பெருமாள் கோயில் அருகேயுள்ள மானாங்குன்றம்... மேலும் பார்க்க

ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைகள்: அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் 340 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சா... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - ஈரோடு ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து

போதிய பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணிகள் ஆதரவு இல்லாததால், விழுப்... மேலும் பார்க்க