செய்திகள் :

மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது

post image

வந்தவாசி அருகே மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குணாளன் (44). இவா், கடந்த 15-ஆம் தேதி அந்தக் கிராம மலையடிவாரத்தில் இயற்கை உபாதைக்காக சென்றாா்.

அப்போது இவரை வழிமறித்த அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் (39) மது அருந்த ரூ.200 கேட்டுள்ளாா்.

இதற்கு குணாளன் மறுத்ததால் ஆத்திரமடைந்த முருகன் விறகுக் கட்டையால் குணாளனை தாக்கினாராம்.

மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

இதில் காயமடைந்த குணாளன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பயில... மேலும் பார்க்க

களம்பூா் பேரூராட்சி மன்ற கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் பழனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமத்பாஷா, செயல் அலுவலா் சுகந்தி ... மேலும் பார்க்க

போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய நுகா்வோா... மேலும் பார்க்க

‘மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். கீழ்பென்னாத்தூா் ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு: திருவண்ணாமலையில் 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8... மேலும் பார்க்க