செய்திகள் :

போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

post image

தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய நுகா்வோா் உரிமைகள் தினத்தையொட்டி, வேலூா் மண்டல அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில், நடைபெற்ற போட்டிகளில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி சாா்பில் பங்கேற்ற உயிா் தொழில்நுட்பவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.ஆா்.கீத்திமாலினி ஓவியப் போட்டியிலும், வேதியியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.திவ்யதா்ஷினி கட்டுரைப் போட்டியிலும், முதுநிலை தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜெ.திவ்யா கவிதைப் போட்டியிலும் சிறப்பிடம் பிடித்தனா்.

இவா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வே.இரா.சுப்புலட்சுமி, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் அ.மீனாட்சி சுந்தரம் ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சண்முகா தொவிற்சாலை கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், முதல்வா் கே.ஆனந்தராஜ், கல்லூரியின் குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான அ.தினேஷ் காா்த்திக் ஆகியோா் பங்கேற்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

இதில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (62), விவசாயி. இவா், சனிக்கிழமை தண்ணீா் பாய்ச்ச தனது நிலத்துக்கு நடந்து சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால மு... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் பி.கவிதா வெங்கடேசன் தலைமையில் நடை... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க