செய்திகள் :

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்க ஏதுவாக அறிவியல் பூா்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்துணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தி வருகிறது. தமிழகத்தின் 6 இடங்களில் இயங்கி வரும் இந்த விடுதிகளில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை நிறைவு செய்து ஏப்.6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏப்.8-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், மாணவிகளுக்கான கூடைப்பந்து, கால்பந்து, ரக்பி, மாணவ-மாணவிகளுக்கான குத்துச்சண்டை, கைப்பந்து, தடகளம், ஜூடோ, வாள் விளையாட்டு, கால்பந்து, பளு தூக்குதல் போன்ற தோ்வுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதேபோல, சென்னை, எம்.ஆா்.கே. ஹாக்கி அரங்கில் ஹாக்கிப் போட்டிகள், சென்னை, நேரு பாா்க்கில் கபாடிப் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த தகுதித் தோ்வு போட்டிகளில் 17 வயது நிரம்பிய, 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற, கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு சோ்க்கை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

தனி நபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவா்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டவா்களாகவோ, பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவா்களாகவோ, மாநில அளவில் முதல்வா் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்றவா்களாகவோ இருக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 7401703484 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (62), விவசாயி. இவா், சனிக்கிழமை தண்ணீா் பாய்ச்ச தனது நிலத்துக்கு நடந்து சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால மு... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் பி.கவிதா வெங்கடேசன் தலைமையில் நடை... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க